இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, மற்றும் நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் பெரும் கொண்டாட்டங்களை மேற்கொண்டனர்.
படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

இந்த நிலையில் வாரிசு, துணிவு பட நள்ளிரவு சிறப்புக் காட்சிகளை அனுமதித்த நேரத்தை தவிர்த்து 11ம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணிக்கு படங்களை வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.