ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் உருவான ‘ரத்த சாட்சி’ என்ற திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த டீஸர் தற்போது வைரலாகி வருகின்றது.

மேலும் இந்தப்படத்தின் கதையானது பரம்பரை பரம்பரையாக அடிமையாக வைத்து வேலை வாங்கி வரும் ஒரு முதலாளியின் கொடுமையை எதிர்த்து பொங்கி எழும் தொழிலாளர்களின் கதைதான் இந்த ‘ரத்த சாட்சி’ என்பது ஒரு நிமிட டீசரில் இருந்து தெரியவருகிறது.

ஜாவித் ரியாஸ் இசையில் உருவான இந்த படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், ஹரிஷ் குமார், கல்யாண் மாஸ்டர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் விரைவில் ஆஹா ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.