கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு குறித்த மாஸ் அப்டேட் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே இன்னும் மீதம் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ‘பத்து தல’ படத்தின் வசனகாட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக எடுத்த குரூப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். இந்த படம் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகின்றது. இப்படத்திற்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.