பிரபல நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடித்து வரும் திரைப்படம் ’ருத்ரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படம் வரும் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் தினத்தில் ’ருத்ரன்’ வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒருசில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்:

எங்கள் நிறுவனத்தின் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா, டைரி வெற்றி படைப்புகளான பட வரிசையில் அடுத்து வருவது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ’ருத்ரன்’ திரைப்படம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
ராகவா லாரன்ஸ் இன் ‘காஞ்சனா’ திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படம் ’ருத்ரன்’ என்பதால் அவர்களின் ரசிகர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை முழு திருப்திபடுத்தும் விதமாக படத்தின் நிறைவு பணிகள் நடைபெற்று வருகிறது.
’ருத்ரன்’ திரைப்படம் கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நிறைவடைய சில மாதங்கள் தேவைப்படுவதால் ராகவா லாரன்ஸ் நடிப்பில் மாபெரும் வெற்றி கண்ட ’காஞ்சனா’ படம் வெளியான ஏப்ரல் மாதத்தில் அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ’ருத்ரன்’ திரைப்படம் வெளியாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இறைவன் அருளுடன் ரசிகர்கள் மக்கள் ஊடகங்கள் ஆதரவுடன் ஏப்ரல் மாதத்தில் வெற்றி வாகை சூட வாழ்த்துமாறு வேண்டிக்கொள்கிறேன் என தயாரிப்பாளர் கதிரேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.