இயக்குனர் ஞானவேல் இந்தி பக்கம் திரும்பியுள்ளது குறித்த செய்திகள்!
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் அடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இந்தியில் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி குறித்த கதை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இப்படம் உண்மை கதையின் தழுவலாக உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் இந்தி சினிமாவின் பிரபல நடிகை ஒருவர் ஜீவஜோதி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ‘தோசா கிங்’ என வைத்திருப்பதாகவும் இந்த படத்தை ஜங்கிள் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பின்புதான் சூர்யா படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.