‘வணங்கான்’ திரைப்படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்!
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக ‘நாச்சியார்’ திரைப்படம் வெளியானது. அதை அடுத்து ரசிகர்களுக்கு பாலாவின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சூர்யா, அவர் இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் ‘வணங்கான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.