சூர்யாவின் ‘வணங்கான்’ படத்தின் தெலுங்கு டைட்டில் குறித்த தகவல்!
இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘நாச்சியார்’ திரைப்படத்தின் பின் அவர் இயக்கிய ‘வர்மா’ திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்தைக் கைவிட்டார். அதன் பிறகு வேறொரு இயக்குனரை வைத்து முழுப் படத்தையும் எடுத்து ‘ஆதித்ய வர்மா’ என்னும் டைட்டிலில் ரிலீஸ் செய்தனர்.

இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படமாக தற்போது சூர்யா நடித்து, அவரே தயாரித்து வரும் சூர்யாவின் 41 வது படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று சூர்யா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி வரும் நிலையில் தமிழில் ‘வணங்கான்’ என்றும் தெலுங்கில் அதே பொருளில் வரும் ‘அச்சாலுடு’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறபடுகிறது.
