சூர்யா – பாலா படத்தின் தலைப்பு
இயக்குனர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் படம் ‘சூர்யா 41’. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 34 நாட்கள் கன்னியாகுமரியில் நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்திருந்தநிலையிலும், தொடர்ந்து அதுபோன்ற வதந்திகள் பரவி வந்த நிலையில் நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவோடு இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து “மீண்டும் படப்பிடிப்புத் தளத்துக்கு செல்ல தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த பதிவு இணையவாசிகள் அனைவரின் கவனத்தைப் பெற்றது.
இந்நிலையில் ‘சூர்யா 41’ படத்தின் தலைப்பு பற்றிய தகவல்கள் சினிமா வட்டாரங்களில் கசிந்துள்ளன. கதைக்களம் கடலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளதாலும், படத்தின் கதாநாயகனான சூர்யா படகோட்டியாக வருவதாகவும் சொல்லப்படும் நிலையில் இயக்குனர் பாலா ‘கடலாடி’ என்ற தலைப்பை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர மற்றொரு தலைப்பும் ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் தெருவிக்கின்றன.