பிரபல நடிகை ஆபாச படம் நடித்தது குறித்து போலீசாரால் கைது!
Poonam Pandey, Tamil Cinema 01-June-2022 – ஆபாச பட குற்றத்தால் பிரபல நடிகை மற்றும் அவரது கணவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே கடந்த 2020 ஆம் ஆண்டு கோவா மாநில கடற்கரையில் ஆபாச படத்தில் நடித்ததாகவும் இதனை அவருடைய கணவர் வீடியோ எடுத்துள்ளார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் பாம்பே ஆகீயோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரல் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்பு ஜாமீனில் வெளியே வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து விசாரணை செய்த போலீசார் 35 சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்திய தண்டனை சட்டமான 292, 293, 294 மற்றும் 447 கீழ் நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது கணவர் சாம் பாம்பே ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்று கூறப்படுகிறது.
